வியாழன், 26 மார்ச், 2009

புதுமுக நடிகர்களுக்கு கிராக்கி வசூலை குவிக்கும் “சிறு பட்ஜெட்” படங்கள்

Source=http://www.maalaimalar.com/2009/03/25130156/CNI0340250309.html

தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் மத்தியில் “சிறு பட்ஜெட்” படங்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களில் ரூ.10 கோடி முதல் ரூ.30 கோடி வரை செலவிட்டு எடுத்து பல படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தின. தயாரிப்பாளர்கள் போட்ட முதலில் பாதி கூட எடுக்க முடியாமல் திணறினர். முன்னணி நடிகர்களின் படங்களில் ஒரு வாரத்திலேயே சுருண்ட கதையும் உண்டு. ஆனாலும் பல கோடிகளை கொட்டி பெரிய படங்கள் எடுக்கவே புதிது புதிதாக கார்ப்பரேட் நிறுவனங்கள் முளைத்து ஒரு படத்திலேயே சூடு கண்டு ஒதுங்கின.

சிறு பட்ஜெட்டில் படங்கள் எடுக்க யாரும் துணியவில்லை. “சுப்பிரமணியபுரம்” படத்தின் வெற்றி திரையுலகையே புரட்டி போட்டது. “வெண்ணிலா கபடி குழு” படமும் நன்றாக ஓடியது. மேலும் பல சிறிய படங்கள் விநியோகஸ்தர்கள் கையை கடிக்காமல் சிறிதளவும் லாபம் ஈட்டி கொடுத்தன.

இதையடுத்து சிறு பட்ஜெட் படங்கள் எடுக்க தயாரிப்பாளர்கள் இடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அப்படங்களில் நடிக்க புதுமுக நடிகர்களுக்கும் கிராக்கி வந்துள்ளது.

ரோஹன் கிருஷ்ணா இயக்கிய “பட்டாளம்” படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் மத்தியில் போட்டா போட்டி உள்ளது. குங்கும பூவும் கொஞ்சு புறாவும் என்ற சிறு பட்ஜெட் படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


“அன்றொரு நாள்”, “சிரித்தால் ரசிப்பேன்” “முன்தினம் பார்த்தேனே”, “கதிர்வேல்”, “ஓடிப்போலாமா”, “சங்கரா”, “ரேணி குண்டா”, “குலசாமி”, “பிரம்மதேவா” “ஆடாத ஆட்டமெல்லாம்”, “பலம்”, “ரயிலு”, “வானம் பார்த்த சீமையிலே”, “தோரணம்”, “என் பெயர் குமாரசாமி”, “சங்கரன்கோவில்” உள்பட 75 சிறு பட்ஜெட் படங்கள் தற்போது தயாரிப்பில் உள்ளன. குறைந்த சம்பளம், தயாரிப்பில் சிக்கனம் என எடுக்கப்படும் இப்படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் முண்டியடிக்கிறார்கள். “சேட்டிலைட்” உரிமை மூலமும் இவை பணம் பண்ணி கொடுக்கின்றன.

புதன், 25 மார்ச், 2009

பொருளாதார நெருக்கடியால் தாமதம் மர்மயோகி, மருதநாயகம் படங்களை கைவிடமாட்டேன் -கமலஹாசன்

Source: http://www.maalaimalar.com/2009/03/11150843/CNI0460110309.html

நடிகர் கமலஹாசன் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:-


கேள்வி:- புது நடிகர்கள் நிறைய வருகிறார்களே?

பதில்:- இயக்குனர் பாலச்சந்தர் ரொம்ப வருடத்துக்கு முன் என்னையும் ரஜினியையும் அறிமுகம் செய்தார். பல ஆண்டுகள் எங்கள் ஆட்சி நீடித்தது. இப்போது நிறைய புதியவர்கள் வருகிறார்கள். இதுவரவேற்கத் தக்கதாகும். புதுமுக நடிகர்கள் தங்கள் திறமைகள் மூலம் என்னையும் ரஜினியையும் மீறி நல்லநடிகர்களாக வர வேண்டும்.
கே:- நடிகர்கள் அரசியலில் ஈடுபடுகிறார்களே? நீங்கள் வருவீர்களா?

ப:- நான் நடிகன் எனக்கு தெரிந்தது நடிக்க மட்டும்தான். எனக்கு தெரிந்த வேலையை செய்யத்தான் நான் விரும்புவேன். எனக்கு தெரியாத தகுதி இல்லாத வேலைக்கு போக மாட்டேன்.

கே:- உங்கள் படங்கள் ஆஸ்கார் விருது பெறாததற்கு காரணம் என்ன?

ப:- எனது படங்கள் அமெரிக்கர்களுக்காக எடுக்கப்படவில்லை. இந்திய மக்களுக்காக எடுக்கப்படுகிறது. இந்தியர்கள் ஆமோதிப்பதில் கிடைக்கும் திருப்தி போதும். ஆஸ்கார் விருது என்பது அமெரிக்க ஸ்டாண்டர்டு படங்களுக்கு வழங்கப்பட கூடியது. என்படங்களில் இந்திய ஸ்டாண்டர்டு தான் உள்ளது. எனக்கு ஐ.எஸ்.ஐ. முத்திரை இருக்கிறது. ஏ.எஸ்.ஐ. முத்திரை தேவைஇல்லை.

கே:- ஹாலிவுட் படங்களில் நடிப்பீர்களா?

ப:- எனக்கு ஹாலிவுட் படங்களில் பேசும் அளவு ஆங்கிலம் வராது.

ஹாலிவுட் நடிகர்களை தமிழ் தெலுங்கு பேசவைத்து இங்குள்ள படங்களில் நடிக்க செய்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் நான் ஆங்கில படங்களில் நடித்தால் இருக்கும்.

கே:- மர்மயோகி என்ன ஆனது?

ப:- பொருளாதார ரீதியான சில கஷ்டங்கள் உள்ளது. அந்த கஷ்டங்கள் போனதும் படம் ஆரம்ப மாகும். மருதநாயகம் படமும் கைவிடப்பட வில்லை. கண்டிப்பாக முடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. மருதநாயகம் எனது கனவுப் படம் இல்லை. என் குழந்தை. அதில் என் இளமைப்பருவ காட்சியை ஏற்கனவே எடுத்து முடித்து விட்டேன். வயதான பாத்திரங்கள் தான் பாக்கி உள்ளது. அதை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

எந்திரன் படப்பிடிப்பு ரஜினி ஸ்டைலில் வியந்தேன் -ஐஸ்வர்யாராய்

Source: http://www.maalaimalar.com/2009/03/24145640/CNI0400240309.html

ஷங்கர் இயக்கும் “எந்தி ரன்” படத்தில் ரஜினி-ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது. அமெரிக்காவில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு உள்ளது. வேலூர், பாலவாக்கம் பகுதிகளில் உள்ள எஞ்ஜினீயரிங் கல்லூரிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது.

இதையடுத்து ஐதராபாத்தில் தற்போது பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. சாரிசிரில் அதிக பொருட் செலவில் நடன அரங்கை அமைத்து கொடுத்துள்ளார். அதில் ரஜினி “ரோபோ” ஐஸ்வர்யாராய் ஆகியோர் சேர்ந்து நடனம் ஆடும் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கல்கத்தாவில் “ராவணன்” படப்பிடிப்பை முடித்து விட்டு நேராக ஐதராபாத் சென்று படப்பிடிப்பில் பங்கேற்றார் ஐஸ்வர்யாராய். பிரபுதேவா நடன பயிற்சி அளிக்கிறார். ரஜினி உடல்வாகுக்கு தகுந்த மாதிரி டான்ஸ் அசைவுகள் சொல்லி கொடுத்து ஆடவைக்கிறார். “சிவாஜி” படத்தில் “ஸ்பெயின் நாட்டில் ரஜினி, ஸ்ரேயா ஆடிய “ஸ்டைலு” பாடலுக்கும் பிரபுதேவா தான் டான்ஸ் மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐதராபாத் படப்பிடிப்புக்கு வந்த ஐஸ்வர்யா ராயிடம் ரஜினியுடன் நடிக்கும் அனுபவம் பற்றி கேட்ட போது அவர் கூறியதாவது:-

நிறைய படங்களில் ரஜினி சார் ஸ்டைல் பார்த்துதான் நான் வளர்ந்தேன். அவருடன் நடிக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. இதற்கு முன் அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது “எந்திரன்” படம் மூலம் அது நிறைவேறி இருக்கிறது. ரஜினியை பக்கத்தில் இருந்து பார்த்தேன். அவரது எளிமையும் ஸ்டைலும் என்னை வியக்க வைத்தது.

“எந்திரன்” படம் என் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத படம்.

இவ்வாறு அவர் கூறினார்