வெள்ளி, 29 மே, 2009

நயனை கைவிட்ட தயாரிப்பாளர்கள்

source:http://www.maalaimalar.com/2009/05/28130040/nayan.html



போன வருடம் குசேலன், சத்யம், ஏகன், வில்லு என ஏகப்பட்ட படங்களில் அதுவும் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தவர் நயன்தாராதான். எல்லாமே சூப்பர் ப்ளாப் படங்கள். விளைவு, இந்த ஆண்டு அவருக்கு தமிழில் ஒரேயொரு படம்தான். சூர்யாவுடன் நடிக்கும் ஆதவன் தவிர வேறு படங்களே அவருக்கு இல்லை.

போதாக்குறைக்கு லிங்குசாமியுடன் கசமுசா, பிரபுதேவாவுடன் காதல் என கண்டபடி செய்திகள் வந்த வண்ணம் இருப்பதால் நயன் கலைச்சேவை போதுமப்பா, பிரஷ்ஷா யாரையாவது புக் பண்ணிக்கலாம் என இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கைவிடும் நிலைதான் இப்போது. இதைபுரிந்து கொண்ட நயன்தாரா உஷாராக தெலுங்கு மற்றும் மலையாள உலகில் வரும் வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக்கொள்ள தொடங்கி விட்டாராம்.

மலையாளத்தில் அவர் நடிக்கும் பாடிகார்ட் முடிந்த கையோடு இன்னொரு மலையாள படம் நடிக்க வந்த வாய்ப்பை, சம்பளம் பற்றியெல்லாம் யோசிக்காமல் ஒப்புக்கொண்டுள்ளார். தெலுங்கில் ஆஞ்சநேயலு என்ற படத்தில் நடிக்கும் அவர் ஜுனியர் என்.டி.ஆருடன் ஒரு படத்தில் நடிக்க வலியப்போய் ஒப்புக்கொண்டாராம்.

ஐஸ்வர்யாராய்போல் நடிப்பதாக பாராட்டுகள் குவிகிறது -அசின்

source: http://www.maalaimalar.com/2009/05/29112930/CNI0180290509.html
இந்தி கஜினி மூலம் நம்பர் ஒன் நடிகையாக உயர்ந்த அசினுக்கு பட வாய்ப்புகளும் பாராட்டு கடிதங்களும் குவிந்த வண்ணம் உள்ளன. ஐஸ்வர்யாராய் போல் நடிப்பதாக கடிதங்களில் ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்களாம். இது பற்றி அசின் சொல்கிறார்:-



இந்தி கஜினி மூலம் நம்பர் ஒன் நடிகையாக உயர்ந்த அசினுக்கு பட வாய்ப்புகளும் பாராட்டு கடிதங்களும் குவிந்த வண்ணம் உள்ளன. ஐஸ்வர்யாராய் போல் நடிப்பதாக கடிதங்களில் ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்களாம். இது பற்றி அசின் சொல்கிறார்:-

முதல் படத்திலேயே எல்லோருக்கும் அதிர்ஷ்டம் அமைவது இல்லை. ஆனால் எனக்கு கிடைத்தது. இந்தி கஜினிக்கு பின் பிரபலமான நடிகையாகி விட்டேன்.

ஐஸ்வர்யாராய் போல் என் நடிப்பு இருப்பதாக பாராட்டுகிறார்கள். அவரைப்போல் கண்களால் நடிப்பை வெளிப்படுத்துகிறேன் என்கின்றனர். ஐஸ்வர்யாராய் சிறந்த நடிகை அவருடன் என்னை ஒப்பிட்டு பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐஸ்வர்யாராய் அளவுக்கு நான் உயர்வேனா என்ற பயமும் ஏற்படுகிறது.

குறிப்பாக விளம்பரமொன்றில் நடித்துள்ளேன். டெலிவிஷன்களில் தற்போது அது ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. அதை பார்த்ததும் நிறைய பாராட்டுகள் வருகின்றன.

நான் எவ்வளவுதான் உயர்ந்தாலும் எனது கால்கள் பூமியில்தான் இருக்கும்.

இத்தனை வளர்ச்சிக்கும் காரணம் தமிழ் திரையுலகம் தான். அதை ஒரு போதும் மறக்கமாட்டேன். தமிழ் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் கதை நன்றாக இல்லாததால் ஒப்புக்கொள்ளவில்லை.

19 ஸ்டெப்ஸ் என்ற படத்தில் நடிக்க உள்ளேன். தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்படம் தயாராகிறது. அதில் கமலும் நடிக்கிறார். நான் மலையாள பெண்ணாக வருகிறேன். களரி சண்டை கற்றுத்தரும் மாஸ்டர் வேடத்தில் கமல் நடிக்கிறார். என் கேரக்டருக்கென்று தனியாக களரி சண்டை கற்று வருகிறேன்.

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். கிளாமருக்கு முக்கியத்துவம் தரக்கூடாது என்பது என் பாலிசி. இந்தி திரையுலகின் என் ரோல் மாடல் ஸ்ரீதேவி, அவரைப்போல் நடிக்க விரும்புகிறேன்.

காதல் பற்றி நிறையபேர் கேட்கின்றனர். நானும் ஒரு பெண்தான். என்னை காதலிப்பவர்களை நான் காதலிக்க முடியாது. இதுவரை என் மனதுக்குள் காதல் அலாரம் அடிக்கவில்லை. ஒரு வேளை என் பெற்றோர் பார்க்கிற பையனை பார்த்தால் அந்த அலாரம் அடிக்கலாம்.

இவ்வாறு அசின் கூறினார்.