source:http://www.maalaimalar.com/2009/05/28130040/nayan.html
போன வருடம் குசேலன், சத்யம், ஏகன், வில்லு என ஏகப்பட்ட படங்களில் அதுவும் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தவர் நயன்தாராதான். எல்லாமே சூப்பர் ப்ளாப் படங்கள். விளைவு, இந்த ஆண்டு அவருக்கு தமிழில் ஒரேயொரு படம்தான். சூர்யாவுடன் நடிக்கும் ஆதவன் தவிர வேறு படங்களே அவருக்கு இல்லை.
போதாக்குறைக்கு லிங்குசாமியுடன் கசமுசா, பிரபுதேவாவுடன் காதல் என கண்டபடி செய்திகள் வந்த வண்ணம் இருப்பதால் நயன் கலைச்சேவை போதுமப்பா, பிரஷ்ஷா யாரையாவது புக் பண்ணிக்கலாம் என இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கைவிடும் நிலைதான் இப்போது. இதைபுரிந்து கொண்ட நயன்தாரா உஷாராக தெலுங்கு மற்றும் மலையாள உலகில் வரும் வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக்கொள்ள தொடங்கி விட்டாராம்.
மலையாளத்தில் அவர் நடிக்கும் பாடிகார்ட் முடிந்த கையோடு இன்னொரு மலையாள படம் நடிக்க வந்த வாய்ப்பை, சம்பளம் பற்றியெல்லாம் யோசிக்காமல் ஒப்புக்கொண்டுள்ளார். தெலுங்கில் ஆஞ்சநேயலு என்ற படத்தில் நடிக்கும் அவர் ஜுனியர் என்.டி.ஆருடன் ஒரு படத்தில் நடிக்க வலியப்போய் ஒப்புக்கொண்டாராம்.
வெள்ளி, 29 மே, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
நல்ல பதிவு நன்றி :)
I'm from chennai and i love this blog
good content and thanks for sharing:)
கருத்துரையிடுக